ஹிந்து ஜனசேனா அமைப்பு, ஹிந்துக்களை ஒருங்கிணைத்து தர்மத்தை நிலைநாட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டது. பாரதியாரின் பாரதமாதா, பால கங்காதர திலகர் அவர்களின் ஒற்றுமை, சிவாஜி மகாராஜாவின் பாதுகாப்பு கொள்கை ஆகியவற்றை முன்வைத்து, எங்கள் இயக்கம் ஆன்மீகம், சமூக சேவை, வலுவான தலைமைத்துவம் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தமிழகத்தை தலைமையகமாகக் கொண்டு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவர்களின் மூலம் ஹிந்து உரிமைகள், பண்பாடு, அடையாளங்களை பாதுகாத்து வருகிறோம்
About UsYears of Service
Active Members
Impact Stories
Service Areas
Stay connected with the latest updates, events, and voices from Hindhu Jana Sena. Our blogs share insights, cultural values, and initiatives that inspire unity and social change.
முரளி மோகன் குருஜி (MMji) அவர்கள், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உழைப்பால் ஓசூரின் முன்னணி தொழிலதிபராகவும் ஆன்மீக சிந்தனையாளராகவும் உயர்ந்தார். அவரின் 13 வருட ஹிந்துத்துவப் போராட்டங்களால், இளைஞர்கள் அவரை அன்புடன் MMji என்று அழைக்கின்றனர். பல முன்னணி இந்து மத தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு, ஹிந்துக்களை ஒன்றிணைக்க அவர் ஹிந்து ஜனசேனாவை நிறுவினார். ஆன்மீகத்தில் ஆழ்ந்த இவர், 64 ஆயக்கலைகளில் 20 கலைகளை கற்றவர். உலகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட சிஷ்யர்களைக் கொண்டுள்ளார்.
Learn More
மகாகவி பாரதியார் அவர்களின் பாரதமாதா கொள்கையை பின்பற்றி, நம் தேசத்தை தாயாகக் கருதி சேவை செய்வது.
பால கங்காதர திலகர் அவர்களின் ஹிந்து ஒற்றுமை கொள்கையை பின்பற்றி, ஒருமைப்பாட்டுடன் நிறுத்துவது.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கொள்கையை பின்பற்றி, ஹிந்து மதத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பது.
அமைப்பின் அனைத்து பொறுப்பாளர்களும் ஒரே சீருடையை அணிவது, எங்கள் ஒற்றுமையின் அடையாளம்.
38 மாவட்டங்களிலும், ஒருவரைத் தேர்வு செய்து, டிராபிக் ராமசாமி போல சட்டரீதியான போராட்டம் நடத்தக் கூடிய தலைமை அமைப்பது.
தமிழகத்தை தலைமையகமாகக் கொண்டு, ஹிந்து மதத்திற்கான பிரச்சனைகளில் உறுதியுடன் செயல்படுவது.
ஹிந்து ஜனசேனாவின் கொள்கைகள், ஒற்றுமை, தர்ம பாதுகாப்பு, மற்றும் சமூக சேவையை மையமாகக் கொண்டவை. ஹிந்துக்களை ஒருங்கிணைத்து, பாரம்பரியத்தையும் ஆன்மீகத்தையும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பதே எங்கள் நோக்கம். எங்கள் வழிகாட்டும் மந்திரம் – ஒற்றுமையே வலிமை, தர்மமே எங்கள் வழி.
எங்கள் பயணத்தில் இணைக
நமது அமைப்பிற்கு ஆலோசகராக ஆர் எஸ் எஸ் ஐ சேர்ந்த மதிப்பிற்குரிய திரு ரங்கராஜன் அவர்களும், அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு பி வி கே சாஸ்திரி அவர்களும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள், இதில் திரு ரங்கராஜன் ஐயா அவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் குருஜி திரு கோல்வால்கர் அவர்களுடன் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறுப்பினராகா